டெல்லி எல்லைப்பகுதிகளில், விவசாயிகளின் போராட்டம், காரணமாக அப்பகுதி மக்களும், அண்டை மாநிலங்களும் பெரும் அவதிக்குள்ளானதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் அனில் தேசாய் எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் எந்த விதமான போராட்டம் என்றாலும், மக்களுக்கும்,அரசுக்கும், நிதி இழப்பு ஏற்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.