விவசாயிகள் பேரணியால் குலுங்கிய டெல்லி : ராகுல்காந்தி ஆதரவு

விவசாய கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மாபெரும் பேரணி நடத்தினர்.
விவசாயிகள் பேரணியால் குலுங்கிய டெல்லி : ராகுல்காந்தி ஆதரவு
Published on
விவசாய கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மாபெரும் பேரணி நடத்தினர். இதற்காக நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள், ஆயிரக்கணக்கில் டெல்லியில் குவிந்திருந்தனர். இதனால் தலைநகர் டெல்லியில் திரும்பிய திசையெங்கும் விவசாயிகளின் தலைகளாக காட்சி அளித்தன. நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி துவங்கும் முன், ஜந்தர்மந்தரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதி அளித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com