சூரத் நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல்காந்தி - பிரதமர் மோடி பற்றி தவறாக பேசவில்லை என விளக்கம்

பிரதமர் மோடி குறித்து தனிப்பட்ட முறையில் தவறாக எதுவும் பேசவில்லை என்று சூரத் நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
சூரத் நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல்காந்தி - பிரதமர் மோடி பற்றி தவறாக பேசவில்லை என விளக்கம்
Published on
பிரதமர் மோடி குறித்து தனிப்பட்ட முறையில் தவறாக எதுவும் பேசவில்லை என்று சூரத் நீதிமன்றத்தில், ஆஜரான ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி, இன்று சூரத் நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல்காந்தி, தனது தேர்தல் பிரசார உரை பற்றி விளக்கம் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக நீதிமன்றத்திற்கு வந்த ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com