பாம்பிடம் இருந்து தப்பிய வனத்துறை அதிகாரி

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் உள்ள வனப்பகுதியில் சுமார் 18 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று சிக்கியது.
பாம்பிடம் இருந்து தப்பிய வனத்துறை அதிகாரி
Published on

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் உள்ள வனப்பகுதியில் சுமார் 18 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று சிக்கியது. அந்த பகுதியில், வனத்துறை அதிகாரி சஞ்சய் தத் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றபோது, மிக நீளமான அந்த பாம்புடன் படம் எடுக்க முயன்றுள்ளனர். அப்போது, திடீரென வன அதிகாரி மீது அந்த மலைப்பாம்பு விழுந்துள்ளது. உடனே, அருகில் இருந்த வனத்துறை அலுவலர்கள் ஒன்று சேர்ந்த அந்த பாம்பை லாவகமாக பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com