புதுச்சேரி சிறுமியின் பெற்றோருக்கு பாஜக சார்பில் நிதியுதவி

புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும், அவை எடுபடாது எனவும் பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி தெரிவித்துள்ளார். அண்மையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் இல்லத்திற்கு பாஜக தேர்தல் பொறுப்பாளர் குரானா, மாநிலத் தலைவர் செல்வ கணபதி உள்ளிட்ட பலர் நேரில் சென்றனர். சிறுமியின் பெற்றோருக்கு 5 லட்ச ரூபாய் நிதி வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் பேசிய செல்வகணபதி, சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுவதாக விமர்சித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com