கிருஸ்து சபையை இந்து முன்னணி முற்றுகை

கட்டாயம் மதமாற்றம் செய்வதாகப் புகார்
கிருஸ்து சபையை இந்து முன்னணி முற்றுகை
Published on
புதுச்சேரி அருகே கட்டாய மதமாற்றம் செய்வதாக கூறி கிருஸ்து சபையை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரிக்கலாம்பாக்கம் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஒரு குடிசையில் கிறிஸ்துவ சபை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்வதாகக் கூறி இன்று இந்து முன்னணியினர் மற்றும் கிராம மக்கள் சபையை முற்றுகையிட்டு, ஜெபகூட்டத்தில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com