புதுச்சேரி to ஆந்திரா - கடல் வழியாக கிளம்பிய 7 பேர் கொண்ட குழு - அசத்தும் விழிப்புணர்வு

புதுச்சேரி to ஆந்திரா - கடல் வழியாக கிளம்பிய 7 பேர் கொண்ட குழு - அசத்தும் விழிப்புணர்வு
Published on

கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து சென்னையை சேர்ந்த எஸ்.யூ.பி. மெரினா கடல் இயக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக, புதுச்சேரியில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் வரை துடுப்பு மூலம் இயங்கும் ஒற்றை ஆள் படகுகளில், 7 பேர் கொண்ட குழு பயணிக்கிறது. இந்த குழுவில் 8ஆம் வகுப்பு மாணவன் ஒருவரும், அடங்குவார். நேற்று புதுச்சேரியில் பயணத்தை தொடங்கிய இந்த குழு, இன்று செங்கல்பட்டு மாவட்டம் சத்ராஸ் கடற்கரையை வந்தடைந்தது. சிறிதுநேர ஓய்வுக்குப்பிறகு இந்தகுழு, மீண்டும் தங்களது கடல் பயணத்தை தொடர்ந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com