நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்

பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன், பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்
Published on

பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன், பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இஸ்ரோ நிறுவனம் பூமியைக் கண்காணிப்பதற்காக 'ரீசாட்-2 பி.ஆர்-1' என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது. இந்த செயற்கை கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம், நாளை மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, 'கவுன்ட் டவுன்' இன்று தொடங்குகிறது. இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களும் இந்த ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com