Dogs | Shiv Sena | Viral Video | நகராட்சி அலுவலகத்தில் நாய்களை அவிழ்த்துவிட்ட போராட்டக்காரர்கள்

நகராட்சி அலுவலகத்தில் நாய்களை அவிழ்த்துவிட்ட போராட்டக்காரர்கள்

Dogs | Shiv Sena | Viral Video | நகராட்சி அலுவலகத்தில் நாய்களை அவிழ்த்துவிட்ட போராட்டக்காரர்கள்

மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டம் நிபாத் நகராட்சியில், தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி சிவசேனா உத்தவ் தாக்கரே அணியினர் வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்டனர். நிபாத் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, யுவ சேனா மாவட்டத் தலைவர் விக்ரம் ரந்தாவே உள்ளிட்டோர் சாக்கு மூட்டைகளில் பிடித்து வந்த தெருநாய்களை, நகராட்சி முதன்மை அதிகாரி தீரஜ் பாம்ரேவின் அலுவலகத்திற்குள் அவிழ்த்துவிட்டனர். மேலும், அதிகாரிக்கு ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையை அணிவிக்கவும் போராட்டக்காரர்கள் முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com