லடாக் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் இரங்கல்
லடாக்கின் லே பகுதியில், ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து அறிந்த உடன் தான் வேதனை அடைந்ததாகவும், ராணுவ வீரர்கள் தேசத்திற்கு ஆற்றிய பணி என்றென்றும் நினைவு கூறப்படும் எனவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
