போர் பதற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகா மாவட்டம் கார்வாரில் கடலோர பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1965-ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான்இடையே போர் மூண்ட போது, குஜராத் மாவட்டம் துவாரகா துறைமுகத்தில், பாகிஸ்தான் கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்தியது. தற்போதுள்ள சூழலில் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.