Police திருட சென்ற வீட்டில் பணம், நகை கிடைக்காத ஆத்திரம் -நள்ளிரவில் இவர்கள் செய்த காரியத்தை பாருங்க

Police திருட சென்ற வீட்டில் பணம், நகை கிடைக்காத ஆத்திரம் -நள்ளிரவில் இவர்கள் செய்த காரியத்தை பாருங்க

திருட சென்ற வீட்டில் பணம், நகை கிடைக்காத ஆத்திரம் - இரவோடு இரவாக இவர்கள் செய்த காரியத்தை சிரிக்காம பாருங்க உத்தரபிரதேச மாநிலம் பாண்டா பகுதியில், திருடச் சென்ற வீட்டில் பணம், நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் கிடைக்காததால், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து இரும்பு குழாய்களையும் திருடிச் சென்ற சம்பவம் வினோதத்தை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த 4 திருடர்கள், பல இடங்களில் தேடியும் எதுவும் கிடைக்காததால், சமையலறை, குளியலறை, கழிவறை உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு குழாய்களை கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், 12 மணி நேரத்தில் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 இரும்பு குழாய்கள் மற்றும் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com