

பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேச இலங்கையின் புதிய பிரதமர் ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாலத்தீவு அதிபர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக வருகிற 17ஆம் தேதி பிரதமர் மோடி அங்கு செல்கிறார். அப்போது, பிரதமர் மோடியை பார்த்து, இலங்கை நாடாளுமன்ற கலைப்பு, எதிர்கால செயல்பாடுகள் குறித்து ராஜபக்சே பேசயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.