PM Modi WB Visit | மேற்கு வங்க விசிட்டில் எதிர்பாரா நிகழ்வு - நேரில் சென்று மன்னிப்புகேட்ட PM மோடி
மேற்கு வங்க விசிட்டில் எதிர்பாரா நிகழ்வு - நேரில் சென்று மன்னிப்புகேட்ட PM மோடி
சிலிகுரியில் புதுமணத் தம்பதியிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் தனது வருகையையொட்டி பாதுகாப்பு கெடுபிடிகளால் திருமண விழா பாதிக்கப்பட்டதற்காக, புதுமணத் தம்பதியிடம் பிரதமர் மோடி நேரில் மன்னிப்பு கேட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. சிலிகுரியில் உள்ள தனியார் விடுதியில் பிரதமர் மோடி தங்கியிருந்தபோது, அங்கு நடைபெற்ற ஸ்ரேயா - அக்ஷய் தம்பதியின் திருமண விழாவிற்குப் பாதுகாப்பு காரணங்களால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் விருந்தினர்கள் வருகையில் சிரமம் ஏற்பட்டது. இதனை அறிந்த பிரதமர், பாதுகாப்பு விதிமுறைகளால் ஏற்பட்ட இடையூறுக்காகத் தம்பதியினரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்து, அவர்களை வாழ்த்தினார்.
