நாளை மறுநாள் ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி

ஃபானி புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடுவதற்காக, பிரதமர் மோடி, நாளை மறுநாள் ஒடிசா செல்கிறார்.
நாளை மறுநாள் ஒடிசா செல்கிறார் பிரதமர் மோடி
Published on
ஃபானி புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடுவதற்காக, பிரதமர் மோடி, நாளை மறுநாள் ஒடிசா செல்கிறார். 6ம் தேதி காலை அங்கு செல்லப்போவதாகவும், புயல் சேதம் குறித்து ஆய்வு செய்ய இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவும் மோடி திட்டமிட்டுள்ளார். மேலும், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசிய அவர், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். மேலும், ஒட்டு மொத்த தேசமும் ஒடிசா மக்களுக்கு துணையாக இருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com