"நாட்டில் வலம் வரும் வாரிசு அரசியல்வாதிகள்" - பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு

அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல்வாதிகள் பலர், டாக்டர் அம்பேக்கர் பெயரை பயன்படுத்துவதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்
"நாட்டில் வலம் வரும் வாரிசு அரசியல்வாதிகள்" - பிரதமர் நரேந்திர மோடி கடும் தாக்கு
Published on

அரசியல் ஆதாயத்திற்காக, அரசியல்வாதிகள் பலர், டாக்டர் அம்பேக்கர் பெயரை பயன்படுத்துவதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற கபீர் குருவின் 500 - வது நினைவு நாள் விழாவில் பேசிய அவர், வாரிசு அரசியல் வாதிகள் பலர், நாட்டில் வலம் வருவதாக விமர்சித்தார். இவர்கள், ஏழைகளை காக்க வந்த கடவுளா? என கேள்வி எழுப்பிய பிரதமர், ஏழைகளை ஏமாற்றும் அரசியல் இனி ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்றார். மத்தியில் ஆளும் பாஜக அரசு, நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், ஏழைகளுக்காகவும் உழைத்து வருவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com