PM Modi | `கடவுள்’ என்று சொன்ன பிரதமர் மோடி
கடவுள் என்று சொன்ன பிரதமர் மோடி
PM Modi | `கடவுள்’ என்று சொன்ன பிரதமர் மோடி மாநிலங்களுக்கு இடையேயான அனைத்து விதமான இடைவெளிகளையும் நாம் இணைக்க வேண்டும் என பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அரசு ஊழியர்களின் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் """"சாதனா சப்தா 2026"""" என்ற நிகழ்வை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த அவர், 21 ஆம் நூற்றாண்டில், அமைப்புகளும் உலகமும் வேகமாக மாறிவருவதைப் போலவே, இந்தியாவும் அதே வேகத்தில் முன்னேறி வருவதாக தெரிவித்தார். இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க, பொதுச் சேவையானது காலத்திற்கு ஏற்ப தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், குடிமகனே கடவுள்” என்ற கொள்கையை மனதில் வைத்து இன்றைய அரசு செயல்படுவதாக தெரிவித்தார்.
