மாயார் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மாயார் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
Published on
முதுமலையில் உள்ள மாயார் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், சுற்றுலா பயணிகள் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புலிகள் சரணாலயத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால், வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளது. தொடர்ந்து நீடிக்கும் மழையால், சரணாலயம் பசுமையாக காட்சியளிப்பதுடன் யானைகள், மான்கள், காட்டெருமைகள் என வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக சாலையோரம் சுற்றித்திரிகின்றன.
X

Thanthi TV
www.thanthitv.com