Naxals | ஆயுதங்களுடன் சரண் அடைந்த நக்சல்கள்
சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்தில் ஏழு நக்சல்கள், தங்களது ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்தனர். இவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் 37 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பாதுகாப்பு படையினர் அறிவித்திருந்த நிலையில், சரண் அடைந்துள்ளனர். 2026ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள், இந்தியாவில் நக்சலிசத்தை ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
