

பிரதமராக நரேந்திர மோடி, நாளை இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூடான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து BIMSTEC எனும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில்,
இந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதுஒருபுறம் இருந்தாலும், மோடியை தோ்தலின்போது கடுமையாக எதிர்த்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்.