"என் மகள் கொ*லயாளி கையால் பரிசு வாங்க மாட்டார்" - IAS அதிகாரியிடம் பரிசு பெற மறுத்த சிறுமியின் தந்தை
"என் மகள் கொ*லயாளி கையால் பரிசு வாங்க மாட்டார்" - IAS அதிகாரியிடம் பரிசு பெற மறுத்த சிறுமியின் தந்தை
"என் மகள் கொ*லயாளி கையால் பரிசு வாங்க மாட்டார்" - IAS அதிகாரியிடம் பரிசு பெற மறுத்த சிறுமியின் தந்தை கேரளம் மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற சிறுமிக்கு, ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ராமன் பரிசு வழங்க முயன்றபோது சிறுமியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தனது மகள் கொலையாளியிடம் இருந்து பரிசு வாங்க மாட்டார் என அவர் கூறியதை அடுத்து, உதவி மாவட்ட ஆட்சியர் சிறுமிக்கு பரிசு வழங்கினார். முன்னதாக, பத்திரிகையாளர் பஷீர் உயிரிழந்த சாலை விபத்து வழக்கில் ஸ்ரீராம் வெங்கட்ராமன் மீது குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில், தற்போது இந்த சம்பவம் பேசுபொருள் ஆகியுள்ளது.
