Mumbai | தண்டவாளத்தை மூழ்கடித்த வெள்ளம்..தண்ணீரை கிழித்துக் கொண்டு பறந்த இந்தியாவின் அதிவேகமான ரயில்

மும்பையில் கனமழையால் தண்டவாளத்தை வெள்ளம் சூழ்ந்த நிலையில் வந்தே பாரத் ரயில் சீறிப் பாய்ந்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகள், ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மும்பை காஞ்சூர் மார்க் பகுதியில் தண்டவாளங்களை வெள்ள நீர் முழுமையாக மூழ்கடித்த போதிலும் இந்தியாவின் அதிவேக ரெயிலான வந்தே பாரத் விரைவு இரயில் சற்றும் வேகம் குறையாமல், தேங்கியிருந்த தண்ணீரை இருபுறமும் கிழித்துக் கொண்டு முன்னேறி சென்றது கவனம் பெற்றதுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com