எல்லையோர மாநிலங்களில் ஏவுகணைகளின் பாகங்கள் கண்டெடுப்பு - பரபரப்பில் எல்லைகள்

x

Pakistan Drone | எல்லையோர மாநிலங்களில் ஏவுகணைகளின் பாகங்கள் கண்டெடுப்பு - பரபரப்பில் எல்லைகள்

நேற்று இரவு முதல் அதிகாலை வரை 26 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் எல்லையோர மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் ஏவுகணைகள், கண்காணிப்பு ட்ரோன்கள், ஆயுதமேந்திய ட்ரோன்கள், சிறிய ரக பீரங்கி குண்டுகளின் வெடித்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் ஒரு பெரிய ஏவுகணையின் உடைந்த துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன... இதே போன்ற துண்டுகள் ஜெய்சால்மர் மற்றும் பொக்ரானிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளன.

அதேபோல ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரின் பதோரா கிராமத்திலிருந்தும் உதிரி பாகங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டனர்...

மேலும் ராஜஸ்தான் பார்மர் பகுதியில் குடியிருப்பு அருகே ஒரு ஏவுகணை பாகம் மீட்கப்பட்டது...

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கங்கனிவால் கிராமத்தில் குண்டுவெடிப்புக்குப் பிறகு பாகிஸ்தான் ட்ரோனின் பாகங்கள் மீட்கப்பட்டன...

பஞ்சாபின் முக்லானி கோட் கிராமத்தில் உள்ள ஒரு வயலில் இருந்து ட்ரோனின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன...

பஞ்சாப் அமிர்தசரஸின் காசா கான்ட் அருகே ஆயுதங்களுடன் கூடிய ட்ரோன் பாகங்கள் மீட்கப்பட்டன...

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் உள்ள சிச்ரா கிராமத்தில் தாக்குதல் காரணமாக பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்ட நிலையில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்...

ஜம்மு மாவட்டத்தின் பிஷ்னா பகுதியில் ஏவுகணை பாகம் ஒன்று கிடைத்தது...உதம்பூர் அருகேயும் ஆயுத பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில் ஹரியானாவின் சிர்சாவில் ஏவுகணையின் பாகங்கள் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டன...


Next Story

மேலும் செய்திகள்