ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 5 அடி உயர்வு

நீர்வரத்து அதிகரித்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடரும் மழை காரணமாக கபினி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, அணைக்கு 32 ஆயிரத்து 421 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 45 அடியாகவும், நீர் இருப்பு 14 புள்ளி ஐந்து எட்டு டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com