மருத்துவ கல்லூரி மாணவி கொலை வழக்கு... துப்பாக்கியை விற்ற பீகாரை சேர்ந்தவர் கைது

மருத்துவ கல்லூரி மாணவி கொலை வழக்கு... துப்பாக்கியை விற்ற பீகாரை சேர்ந்தவர் கைது
Published on

மருத்துவ கல்லூரி மாணவி கொலை வழக்கு... துப்பாக்கியை விற்ற பீகாரை சேர்ந்தவர் கைது

கேரளாவில் மருத்துவ கல்லூரி மாணவி மானசாவை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை விற்ற பீகாரை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.கொச்சியில் பல் மருத்துவ கல்லூரி மாணவியான மானசா, கடந்த 30ஆம் தேதி ராஹில் என்ற இளைஞரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் தானும் அதே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் ராஹிலும் உயிரிழந்தார். இதனிடையே அவர் பயன்படுத்திய துப்பாக்கி பீகாரில் இருந்து வாங்கப்பட்டது உறுதியான நிலையில் தனிப்படை போலீசார் பீகார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது துப்பாக்கியை ராஹிலுக்கு விற்ற கப்ரா தாரா கிராமத்தை சேர்ந்த சோனுகுமார் மோடி என்பவரை போலீசார் கைது செய்தனர். 50 ஆயிரம் ரூபாய்க்கு இந்த துப்பாக்கியை ராஹிலிடம் அவர் விற்றதும் தெரியவந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com