உத்தம் நகரில் கடந்த 22ஆம் தேதி விகாஸ் மேத்தா என்பவரை பவன் கெலாட் என்பவர் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். சகோதரரின் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில், இந்த சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது. எதிராளியை சுட்டுக் கொன்ற பின்னர் அதனை தன் செல்போனில் படம் எடுக்கும் காட்சிகளும் தெளிவாக சிசிடிவியில் பதிவாகி உள்ளது. கொலை நடந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியான நிலையில் பவன் கெலாட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.