Mamata Banerjee | வேட்புமனுவைத் தள்ளுபடி செய்ய சதி - பல தகவல்களை வெளியிட்டு பகீர் கிளப்பிய மம்தா
பபானிபூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தள்ளுபடி செய்ய பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து சதி செய்ததாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். கேஷியாரியில் நடைபெற்ற பேரணியில் பேசிய அவர், போலி பிரமாணப் பத்திரங்கள் மூலம் தனது வாய்ப்பைப் பறிக்க முயன்ற சதி முறியடிக்கப்பட்டதாகக் கூறினார். மேலும், மேற்குவங்கத்தில் 90 லட்சம் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 60 லட்சம் பேர் இந்துக்கள் என்றும் அவர் அதிரடித் தகவலை வெளியிட்டார். பாஜகவின் பொது சிவில் சட்ட வாக்குறுதியை வங்காளத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
