மத்திய பிரதேச மாநில அரசியல் நெருக்கடி - நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்தக் கோரி முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மனுத் தாக்கல்

மத்திய பிரதேச மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த உத்தரவிடக் கோரியும், மாநில முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மத்திய பிரதேச மாநில அரசியல் நெருக்கடி - நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்தக் கோரி முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மனுத் தாக்கல்
Published on

மத்திய பிரதேச மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த உத்தரவிடக் கோரியும், மாநில முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய பிரதேச மாநில சட்டப் பேரவையில் இன்று நடைபெறுவதாக இருந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாத சூழலில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை தாக்கல் செய்த சிவராஜ் சிங் சவுகான், வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com