மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், மற்றொருவரின் மனைவியுடன் ஓடி போன இளைஞரின் குடும்பத்தினரை, மரத்தில் கட்டி வைத்து ஊர்மக்கள் கடுமையமாக தாக்கி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய இந்த வீடியோவை பார்த்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை காப்பாற்றினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 பெண்கள் உள்பட 9 பேரை கைது செய்துள்ளனர்.