பீகாரில் ஓட ஓட துப்பாக்கி சூடு - அதிர்ச்சி காட்சி
பீகாரில் ஓட ஓட துப்பாக்கி சூடு - அதிர்ச்சி காட்சி
திகி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ராய் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை சுட முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் ராய், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓடிய நிலையில், அவரை விடாமல் துரத்திச் சென்ற மர்ம நபர்கள் 4 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் ராய் உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
