UttarPradesh| தூக்கிச் சென்று கடித்து தின்ற சிறுத்தை| கட்டிலில் தூங்கிய விவசாயிக்கு நேர்ந்த பயங்கரம்
Uttar Pradesh | Leopard | தூக்கிச் சென்று கடித்து தின்ற சிறுத்தை | கட்டிலில் தூங்கிய விவசாயிக்கு நேர்ந்த பயங்கரம்
கட்டிலில் தூங்கிய விவசாயியை கடித்து கொன்ற சிறுத்தை - அதிர்ச்சி உத்தரப்பிரதேச வீட்டிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த விவசாயியை, சிறுத்தை தூக்கிச் சென்று கடித்து தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம், மொராதாபாத்(Moradabad) அருகே உள்ள கிராமத்தில், ஜெக்ராம் சிங் என்ற விவசாயி வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கியுள்ளார். நள்ளிரவில் அங்கு வந்த சிறுத்தை, விவசாயியின் கழுத்தை கடித்து அருகில் இருந்த கரும்பு தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றுள்ளது. விடிந்ததும் அவரை காணாததால் குடும்பத்தினரும் கிராம மக்களும் தேடியுள்ளனர். வீட்டின் அருகில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள வயல் பகுதியில் விவசாயியின் உடல் மீட்கப்பட்டது. விவசாயியை கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் கூண்டுகள் மற்றும் தெர்மல் ட்ரோன்கள் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.
