லாரி கண்ணாடியை உடைத்ததற்காக, பொது மக்கள் ஒன்று சேர்ந்து, இரண்டு இளைஞர்களை அரை நிர்வாணமாக்கி, கடுமையாக தாக்கியுள்ளனர். கர்நாடக மாநிலம், கலபுரகி டவுன் பல்கலைக்கழக போலீஸ் எல்லைக்குட்பட்ட சண்ணூர் தாண்டா பகுதியில், நிதின் மற்றும் பரசுராம் ஆகியோர் மது போதையில், கண்ணாடியை உடைத்தனர். இதனைப் பார்த்த பொது மக்கள், அவர்களை தாக்கிய காட்சிகள், சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.