துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்
Published on
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரவிந்தர் ஆஷ்ரமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். அரசு நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநர் தலையிட விதித்த தடையை நீக்க, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com