Kerala | நடந்து செல்லும் போது திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய பெண்..பரபரப்பு காட்சிகள்
கேரளம் மாநிலம் திருச்சூர் அருகே, தடுப்பு அணையின் மேல் கிரிஜா என்ற பெண் நடந்து சென்ற போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலை தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் கிரிஜாவை காப்பாற்றினர். சாலக்குடி கூலப்புடா ஆற்றின் தடுப்பணையில் இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
