

கேரளாவில் பெண் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட
புதூர் கிராம நிர்வாக அலுவலர் சினி சான்றிதழ்கள் வழங்க தாமதம் ஆவதாக கூறி அப்பகுதி பஞ்சாயத்து தலைவர் தலைமையில் பொது மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மனவேதனை அடைந்த சினி தனது கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.