இருசக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு
கேரள மாநிலம் கொல்லத்தில் இருசக்கர வாகன மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொல்லம் மாவட்டத்திற்கு உட்பட்ட அஞ்சல் பகுதியில்
புத்தயம் பகுதியைச் சேர்ந்த சாராம்மா என்ற பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சாலையை கடந்த போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் தலையில் படுகாயமடைந்த சாரம்மா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story
