Kerala | School Student | "லீவுல கூட க்ளாஸ் வக்கிறாங்க.." - Call பண்ணி கம்ப்ளைன்ட்செய்த மாணவன்..
விடுமுறை நாளில் வகுப்பு - அமைச்சரிடம் 7ம் வகுப்பு மாணவன் புகார்
விடுமுறை நாட்களில் பள்ளியில் வகுப்புகள் நடத்தப்படுவதாகக் கூறி, 7ம் வகுப்பு மாணவன் ஒருவர் கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன் குட்டிக்கு தொலைபேசியில் புகார் அளித்தார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் இருந்த போது வந்த அழைப்பில், கோழிக்கோடு மாவட்டம் கீழப்பையூர் பள்ளியில் பயிலும் முகமது ஃபர்கான், விடுமுறையிலும் வகுப்புகள் நடைபெறுவதாக அமைச்சரிடம் தெரிவித்தார். தொடர்ந்து மாணவரிடம் பேசிய அமைச்சர், விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக் கூடாது என்று அமைச்சர் சொன்னதாக பள்ளியில் தெரிவிக்குமாறு மாணவனிடம் கூறினார்.
