

கேரளாவில் கடந்த ஜனவரி மாதம் சபரிமலைக்கு முதன் முதலாக செல்ல முயன்ற பெண் மீது மிளகாய் பொடி வீசப்பட்டது. எர்ணாகுளத்தில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சமூக ஆர்வலரான பிந்து அம்மிணி என்ற அந்த பெண், இன்று காலை சென்றபோது, அங்கிருந்த மர்ம நபர் ஒருவர், மிளகாய் பொடியை ஸ்பிரே மூலமாக முகத்தில் தெளித்தார். இதனால், காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.