"நீ ஏன் சாமி கும்பிட வந்த.." - தமிழக பக்தர்களை சொல்லி சொல்லி அடிக்கும் கேரள போலீசார்

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. நாளை மண்டல பூஜை நடைபெறவுள்ளதால் பக்தர்கள் அதிக அளவில் வந்தவண்ணம் உள்ளனர். நிலக்கல், பம்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 24 மணி நேரத்திற்கும் மேல் பக்தர்கள் காத்திருந்து சன்னிதானத்தை அடைந்தாலும், 18ம் படியில் ஏற பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், தங்களை கேரள போலீசார் விரட்டி அடிப்பதாகவும், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் தமிழக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்