Kerala | பிரியாணி கடையில் மளமளவென பற்றி எரிந்த தீ - மொத்தமாய் கருகி நாசமான கடை

x

கேரளாவில் பிரியாணி கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள கோழிக்கோடு மாவட்டம் கொடுவள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரியாணி கடையில் திடீர் என பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் கடை முழுவதும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்