கேரளாவின் குட்டநாடு பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. அப்பகுதியில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வெள்ள பாதிப்புகளை கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் பார்வையிட்டார். தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து தாமஸ் ஐசக் மீட்பு பணியில் ஈடுபட்டார்.