பெண்ணிடம் தகாத வார்த்தையில் பேசிய கேரள நடிகர் மீது வழக்குப் பதிவு

தமிழ், மலையாளம் உட்பட பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வரும் கேரளாவை சேர்ந்த நடிகர் வினாயகன், தலித் பெண் சமூக செயற்பாட்டாளரிடம் செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறி 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெண்ணிடம் தகாத வார்த்தையில் பேசிய கேரள நடிகர் மீது வழக்குப் பதிவு
Published on

தமிழ், மலையாளம் உட்பட பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வரும் கேரளாவை சேர்ந்த நடிகர் வினாயகன், தலித் பெண் சமூக செயற்பாட்டாளரிடம் செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறி 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். துருவ நட்சத்திரம், திமிரு, சிலம்பாட்டம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் வினாயகன். இவர், மிருதுளா சசீதரன் என்ற இளம்பெண்ணிடம் செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசியதாக முகநூலில் அந்த பெண் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்யக்கோரி கேரளாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கல்பற்றா பகுதி போலீசார் , வினாயகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com