காஷ்மீரில் ராணுவம் - தீவிரவாதி இடையே கடும் துப்பாக்கிச் சண்டை

ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை
காஷ்மீரில் ராணுவம் - தீவிரவாதி இடையே கடும் துப்பாக்கிச் சண்டை
Published on

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கோரிபோரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ராணுவத்தினர் அங்கு துப்பாக்கி சூடு நடத்தினர். தீவிரவாதிகளும் எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் , தீவிரவாதிகளுக்கு உதவியவர் என மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com