கெஞ்சியும் இறங்காத கல்நெஞ்சம்... கண்முன்னே போன உயிர்... கண்டுகொள்ளாத கொடூர ஊழியர்கள்

x

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே, வடசேரியை தலைமையிடமாக கொண்டு தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், மந்தாரம் புதூரை சேர்ந்த செல்வன் என்பவர், தன் மனைவி மூலம் மகளிர் சுய உதவிக் குழுவில் 80 ஆயிரம் ரூபாய் பணம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. மாத தவணையாக பணத்தை செலுத்தி வந்த செல்வன், தன் மகனின் மருத்துவ செலவுகள் காரணமாக நடப்பு மாதத்தின் தவணையை கட்டத் தவறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், செல்வனின் வீட்டிற்குள் நுழைந்த வங்கி ஊழியர்கள், மனைவியின் முன்பே செல்வனை தகாத வார்த்தைகளால் திட்டி பணத்தை செலுத்த வற்புறுத்தியதாக தெரிகிறது. தொடர்ந்து, பணம் கொடுத்தால் தான் செல்வதாக கூறி வங்கி ஊழியர்கள் வீட்டு வாசலிலே அமர்ந்து தகராறு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், பள்ளியில் இருந்து குழந்தைகள் வருகின்ற நேரம் என்பதால், குழந்தைகளை அழைத்து வரக்கோரி மனைவியை அனுப்பிய செல்வன், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்