ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் நகைக்கடையில் நுழைந்த மாற்றுத்திறனாளி கொள்ளையர் ஊழியரின் கண்ணில் மிளகாய்பொடியை தூவி விட்டு நகைகளை திருடிச்சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தமிழக பதிவு எண் கொண்ட பைக்கில் வந்த கொள்ளையர் ஊழியரிடம் நகை வாங்குவது போல் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 6 சவரன் மதிப்புள்ள செயின்களை கையில் வைத்து பார்த்துக்கொண்டிருந்த அவர் ஊழியர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு நகைகளோடு தப்பிச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.