ஜவஹர்லால் நேரு பல்கலைகழக வன்முறை: "யாரையும் கைது செய்யவில்லை" - மத்திய அரசு

கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைகழக வன்முறை: "யாரையும் கைது செய்யவில்லை" - மத்திய அரசு
Published on

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்தும், கைது நடவடிக்கை குறித்தும் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர், வன்முறை தொடர்பான 3 வழக்குகளை குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருவதாகவும், சாட்சியங்களையும், வன்முறையில் ஈடுபட்டோரையும் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எனினும் வன்முறையில் ஈடுபட்டதாக யாரையும் கைது செய்யவில்லை என குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com