துப்பாக்கியுடன் சிக்கிய தலைமையாசிரியர் - நெருங்கும் தேர்தல் காஷ்மீரில் திக் திக்

x

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் உள்ள வீட்டில், வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கமாருதீன் என்ற பள்ளி தலைமையாசிரியரின் வீட்டில் ராணுவப்படையினர் சோதனை நடத்தியபோது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் அவர் பிடிபட்டார். மேலும் அவரது வீட்டிலிருந்து 2 சீன கையெறி குண்டுகள், பாகிஸ்தான் நாட்டின் துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டன. பூஞ்ச் பகுதியில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு இடையூறு விளைவிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்