"வெறும் 20 ரூபாய் தான்" மாமியார் கதை close?

கலபுரகி மாவட்டம் கததரகி கிராமத்தில் உள்ள பக்யவந்தி தேவியின் கோயிலில், உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. 60 லட்சம் ரூபாய் பணம், ஒரு கிலோ வெள்ளி, 200 சவரன் தங்க நகைகள் கிடைத்த‌ன. அதே நேரத்தில், 20 ரூபாய் நோட்டில் எழுதியிருந்த வாசகம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த‌து. அந்த 20 ரூபாய் நோட்டில், "தாயே, எனது அத்தை சீக்கிரம் சாக வேண்டும்," என்று எழுதப்பட்டிருந்தது. சின்னத்திரை சீரியல்களில் வருவது போன்று தற்போது நடப்பதாக, அந்த ரூபாய் நோட்டின் போட்டோவை பகிர்ந்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com