

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவன், பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம் ரிசார்ட் செயற்கைக்கோள் திட்டமிட்டப்படி நாளை விண்ணில் செலுத்தப்படும் என தெரிவித்தார். இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், அமெரிக்க நாடுகளை சேர்ந்த சிறிய ரக செயற்கைக்கோள்களும் நாளை அனுப்பப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.