ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சாட்சியங்களையும், ஆதாரங்களையும் பாதுகாக்க வேண்டியுள்ளதால் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார். சிதம்பரத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சாட்சியங்களை கலைக்க முற்பட சிதம்பரம் என்ன மனநிலை சரியில்லாதவரா? என்று கேள்வி எழுப்பினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சுரேஷ் குமார் கெயிட், அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்